தடுக்க முயன்ற போலீசார்: தப்பிக்க முயன்று பேருந்தில் மோதி உயிரிழந்த வாகனஓட்டி! உண்மை நிலவரம் என்ன?

 

தடுக்க முயன்ற போலீசார்: தப்பிக்க முயன்று பேருந்தில் மோதி உயிரிழந்த வாகனஓட்டி! உண்மை நிலவரம் என்ன?

இருசக்கர வாகனத்தில் சென்றவரை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது, தனியார் பேருந்து மோதி வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி: இருசக்கர வாகனத்தில் சென்றவரை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது, தனியார் பேருந்து மோதி வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதி. இவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ரவுண்டானா பகுதியில் அவர் சென்றபோது, மத்தியபாகம் போலீசார் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் பதற்றமடைந்த அவர் வண்டியை வேறுபக்கம் திருப்பியாக கூறப்படுகிறது. அப்போது அந்த பக்கமாக வந்த  தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முப்பிடாதி  உயிரிழந்தார். 

இதனையடுத்து, அவரது உடலை  அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சென்ற முப்பிடாதியின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.