தங்கம் பிரசாதமாக வழங்கும் அற்புத கோயில்

 

தங்கம் பிரசாதமாக வழங்கும் அற்புத கோயில்

மத்திய பிரதேசம்: தங்கத்தை பிரசாதமாக வழங்கும் அற்புத கோயில் பற்றி இந்த பதிவில் பார்போம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரத்லம் மகாலட்சுமி ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை பிரசாதமாக வழங்கி பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள்,இந்நிகழ்வு ஆண்டுதோறும்  தீபாவளித் திருநாள் அன்று நிகழ்கிறது.அன்றையதினம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 பொதுவாக கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு,குங்குமம், பூ,பழம்,நைவேத்தியப் பொருட்களைத் தான் வழங்குவார்கள்.ஆனால் இக்கோவிலில் மட்டுமே இந்தியாவிலேயே தங்கம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 

இத்தகைய வியத்தகு பெருமை வாய்ந்த ரத்லம் என்றழைக்கப்படும் ரத்னபுரி நகரம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மால்வாப் பகுதியில் வடமேற்குப் திசையில் அமைந்திருக்கிறது.ரத்லம் தங்கம், ரத்லாமி சேவ், ரத்லாமி சீலை போன்றவற்றிற்குப் புகழ்பெற்றது. 

ஏழை எளியவர்களின் வறுமையை அகற்றுவதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் யாரும் காணிக்கையாக பணம் செலுத்துவது இல்லை. வேண்டுதல் நிறைவேறி நேர்த்திக் கடன் செலுத்தும் அனைவரும், தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

 

அப்படி வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.பொதுவாக அனைத்து கோவில்களிலும் சேரும் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை கோவில் திருப்பணிக்காக பயன்படுத்துவார்கள்.

ஆனால் இந்த ஆலயத்தில் கோயிலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

 

இது இறைவனால் தரப்படும் பிரசாதமாக பக்தர்கள் பார்க்கின்றனர். எனவே இந்த ஆலயத்தில் வழங்கப்படும் தங்கத்தை பக்தர்கள் யாரும் விற்பனை செய்வது கிடையாது என்கிறார்கள்.