தங்கம் கடத்திரத்துக்கு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ…அப்படியும் வசமாக சிக்கிய இளைஞர்..!?

 

தங்கம் கடத்திரத்துக்கு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ…அப்படியும் வசமாக சிக்கிய இளைஞர்..!?

மோப்பம் பிடித்தே யார் எதனைக் கடத்துகிறார்கள் என்று அறியும் சுங்கத்துறையினருக்கு இவரைக் கண்டுபிடிப்பதா கஷ்டம். 

தங்கத்தைப் பையில் வைத்து, ஆடையில் வைத்து, உடைமைகளில் மறைத்து மாட்டிக் கொள்பவர்கள் தான் அதிகம். நாள் தோறும் புதிது புதிதான திருட்டு வகைகள் கண்டு பிடிக்கப் படுகின்றன.ஆனால், சிலரோ கச்சிதமாகத் திட்டம் போட்டு, அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.  உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்க போல. 

Naushath

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நௌஷத், சர்ஷாவிலிருந்து விமானத்தின் மூலம் கொச்சி விமான நிலையம் வந்துள்ளார். தங்கக் கடத்தலில் ஈடுபடும் நௌஷத் பார்க்க டிப் டாப் ஆக உடையணிந்து வந்துள்ளார்.  விமானங்களிலிருந்து வருபவர்களிடம் வழக்கமாகச் சோதனை நடத்தப் படும், அப்படி நௌஷத்தை சோதனையிடும் போது சுங்கத் துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்துள்ளது. மோப்பம் பிடித்தே யார் எதனைக் கடத்துகிறார்கள் என்று அறியும் சுங்கத்துறையினருக்கு இவரைக் கண்டுபிடிப்பதா கஷ்டம். 
 

Naushath

சந்தேகம் ஏற்பட்டவுடன் நௌஷத்திடம் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர், தலையில் நடுவில் உள்ள முடியை மட்டும் வழித்து விட்டு, அங்கு 1.13 கிலோ தங்கத்தை வைத்துக் கொண்டு அதன் மேல் ‘விக்’ ஐ அணிந்துள்ளதைக் கண்டுபிடித்து விட்டதால் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளார் நௌஷத். இதனையடுத்து, சுங்கத்துறையினர் நௌஷத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.