தகாத வார்த்தையால் திட்டிய உதவி ஆய்வாளர் ….மாடியிலிருந்து குதித்த பெண் காவலர்!

 

தகாத வார்த்தையால் திட்டிய உதவி ஆய்வாளர் ….மாடியிலிருந்து குதித்த பெண் காவலர்!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர்  தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு மரம் நடும் விழா  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது உதவி காவல் ஆய்வாளர் சகுந்தலா, சக பெண் காவலர் இசக்கி மீனாவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். 

ttn

இந்நிலையில் மனமுடைந்த இசக்கி மீனா மொட்டை மாடியிலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள சக காவலர்கள் மீட்டு ஆபத்தான நிலையில்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ttn

இதுகுறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் சக காவலர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.