தகாத உறவில் ஈடுபட்ட மனைவி: தலையை வெட்டி ஊர்வலம் எடுத்து சென்ற கணவன்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

 

தகாத உறவில் ஈடுபட்ட  மனைவி: தலையை வெட்டி ஊர்வலம் எடுத்து சென்ற கணவன்: அதிர வைக்கும்  வாக்குமூலம்!

மனைவியின் தலையை வெட்டி கொன்றதோடு, அதை   இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாகச் சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: மனைவியின் தலையை வெட்டி கொன்றதோடு, அதை   இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாகச் சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு 
நிவேதா என்ற பெண்ணுடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. முனியப்பன் கேஸ் சிலிண்டரை லோடு ஏற்றும் பணியும், நிவேதா, பெருந்துறையில் உள்ள தனியார் டிப்பார்மெண்ட் ஷோரூமிலும்  வேலை பார்த்து வந்துள்ளனர். 

கள்ளக்காதல் விவகாரம் 

illegal

வழக்கமாக இரவு நேரத்தில் தாமதமாக வரும் முனியப்பன் கடந்த 15 ஆம் தேதி  இரவு 10 மணிக்கு எல்லாம் வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவி நிவேதா வேறு ஒருவருடன் தனிமையில் இருந்துள்ளார். முனியப்பனைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பித்துவிட, கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் நிவேதா தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளார். ஆனால்  இரவு நேரம் என்பதால் தனியாக செல்ல வேண்டாம், தானே கொண்டு தாய் வீட்டில் விடுவதாகக் கூறிய முனியப்பன், நிவேதாவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

வெட்டப்பட்ட தலையுடன் ஊர்வலம் 

murder

இந்நிலையில் பவானி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிவேதாவின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார் முனியப்பன். தலையைத் தனியாக எடுத்து தனது வாகனத்தின் முன் பக்கத்தில் தொங்கவிட்ட முனியப்பன், உடலையும் வாகனத்தில் வைத்தவாறே இரவு முழுவதும்  ஊர்வலமாகச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அதிகாலை சுவர் ஒன்றில் மோதி, நிலைதடுமாறி விழுந்த முனியப்பனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

தண்டனையை ஊரே பார்க்க வேண்டும்

affair

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி ஆசைப்பட்ட வசதியான வாழ்க்கைக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வந்தேன். ஆனால்  அவள் வேலைக்குச்  சென்ற இடத்தில் ஒருவருடன் தவறான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். அதை  நானும் கண்கூடாகவே பார்த்து விட்டேன். அதனால் அவளைக் கொன்றேன். தன்னை நம்பவைத்து ஏமாற்றிய மனைவிக்கு தான் கொடுத்த தண்டனையை ஊரே பார்க்க வேண்டும் என்று நினைத்துத் தான் அவளது தலை மற்றும் உடலுடன் ஊர்வலம் சென்றேன்’ என்று கூறியுள்ளார்.

கள்ளக்காதல் காரணமாக மனைவியைக் கொன்றதோடு, அவளது சடலத்தைக் கணவர் ஊர்வலமாகக் கொண்டு சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: சூர்யா நம் நாட்டின் மிகச்சிறந்த நடிகர் : ஆஸ்கர் நாயகி புகழாரம்!