தகாத உறவால் 20 வயது மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை: 27 நாட்களுக்கு பிறகு கொன்று புதைத்த கொடூரம்!

 

தகாத உறவால் 20 வயது மாணவிக்கு பிறந்த பெண்  குழந்தை: 27 நாட்களுக்கு பிறகு கொன்று புதைத்த கொடூரம்!

வெளியுலகிற்கு தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் குழந்தையின் சத்தம் கூட வெளியில் கேட்காதவாறு 27 நாட்கள் அந்த பச்சிளம் குழந்தையை வைத்திருந்துள்ளனர்.

இடுக்கி: தகாத உறவில் பிறந்த பெண் குழந்தையை கழுத்தை நெரித்து  கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி  பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் வீட்டின் குளியலறையில் குளிக்க சென்றபோது நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் கதவை தட்டி பார்த்த போது, அந்த பெண் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்து இருந்தார். இதை கண்ட அப்பெண்ணின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.

child

மகன் கர்ப்பமாக இருந்தது. நிறைமாதத்தை எட்டியது என எதுவும் தெரியாமல் பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணுடன் இருந்து வந்தது அனைவருக்கும் நடுக்கத்தை கொடுத்துள்ளது. வெளியுலகிற்கு தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் குழந்தையின் சத்தம் கூட வெளியில் கேட்காதவாறு 27 நாட்கள் அந்த பச்சிளம் குழந்தையை வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் மாணவிக்கு குழந்தை பெற்றதாகவும், அதை குடும்பத்தினர் கொன்று விட்டதாகவும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். அதில் குழந்தை பிறந்தது உண்மை தான். உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்துவிட்டது என்றும் கூறியுள்ளனர் அந்த பெண்ணின் குடும்பத்தினர். 

kerala

இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையை புதைத்த இடத்தை தோண்டி  எடுத்த போலீசார், நெகிழியில் சுற்றிக்கிடந்த அந்த சிசுவின் உடலை கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் வந்த மருத்துவ அறிக்கையில், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கல்லூரி மாணவியின் தாய் மீது கொலைவழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.