தகாத உறவால் பெண்களை கொலை செய்து படம் பிடித்த கொலையாளி: சிக்கியது எப்படி?

 

தகாத உறவால் பெண்களை கொலை செய்து படம்  பிடித்த கொலையாளி: சிக்கியது எப்படி?

முறையற்ற உறவு காரணமாக இரண்டு பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்

செஞ்சி: தகாத உறவு காரணமாக இரண்டு பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மாள். இவர் சில நாட்களாக முன்பு காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது மகன் கார்த்திக் போலீசில் புகார் அளிக்க, பெரும்புகை மலைப் பகுதியில்  துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து மலைக்குச் சென்று பார்த்த போது குகையில்குட்டியம்மாள் அழுகிய நிலையில் பெண் உடல் ஒன்று கிடந்துள்ளார்.

murder

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் பலதிடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. ‘குட்டியம்மாள் தனது அண்ணன் மகன் தேவந்திரன் உடன் முறையற்ற உறவு வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி கலைவாணி தேவேந்திரனை கண்டித்துள்ளார். பின் தேவேந்திரன் தனது அத்தையையும் கொடூரமான முறையில் தலையில் கல்லால் சிதைத்து கொலை செய்துள்ளார். இந்த விசாரணையில் இன்னும்   பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

crime

தேவேந்திரன் கடந்த 2 வருடங்களுக்கு முன் செஞ்சி அருகே நாட்டார்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். அதனை அறிந்த தேவேந்திரனின் மனைவி கலைவாணி கண்டித்துள்ளார். இதனால் தேவேந்திரன், சுமதியை பெரும்புகை மலைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக முறையில் கொலை செய்து, அதனை தன்னுடைய செல்போனில் படம் பிடித்து தன் மனைவி கலைவாணியிடம் காண்பித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ந்து போன மனைவி கலைவாணி அந்த மெமரிகார்டை அவனிடமிருந்து கைப்பற்றி மறைத்து வைத்திருந்தார்.

murder

அதே மாதிரி இம்முறையும் தேவேந்திரன் கொலை செய்து விட்டு கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த நிலையில் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார். இதையடுத்து தேவேந்திரனை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.