தகாத உறவால் நடிகரை சுத்தியலால் அடித்து கொன்ற துணை நடிகை கைது!

 

தகாத உறவால் நடிகரை சுத்தியலால் அடித்து கொன்ற துணை நடிகை கைது!

கணவர் சங்கர் கண்டித்ததோடு வடபழனியிலிருந்த வீட்டை காலி செய்துவிட்டு கொரட்டூர் சென்றுள்ளார்.

நாயகன் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் தேவி.  கொரட்டூரில் வசித்து வரும் இவர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் துணை நடிகர் ரவி என்பவருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை தேவியின் கணவர் சங்கர் கண்டித்ததோடு வடபழனியிலிருந்த வீட்டை காலி செய்துவிட்டு கொரட்டூர் சென்றுள்ளார்.

ttn

இருப்பினும் ரவி தேவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து தேவியின்  தங்கை லட்சுமியை சந்திக்க வேண்டும் என்று கூறிய ரவி லட்சுமி வரவில்லை என்றால் அவரது மகனை கடத்திவிடுவேன் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து கொளத்தூரில் உள்ள லட்சுமி வீட்டுக்கு சென்ற அவர் குடிபோதையில் அவரிடம் அத்துமீறியுள்ளார். அப்போது அங்கு வந்த தேவி, அவரது கணவர் சங்கர், லட்சுமி மற்றும்  அவரது கணவர் சவரியார் ஆகியோர் ரவியை தாக்கியுள்ளனர். அப்போது தேவி சுத்தியலால் ரவியை அடிக்க அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ttn

இதனால் பதறிப்போன அவர்கள் நால்வரும், ராஜமங்கல போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர். ரவியின் உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.