ட்விட்டரில் மிரட்டிய கார்த்தி! – அடுத்த சர்ச்சை

 

ட்விட்டரில் மிரட்டிய கார்த்தி! – அடுத்த சர்ச்சை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தைப் பற்றி அவதூறாக பதிவிட்டவரை மிரட்டியதாக கார்த்தி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ப.சிதம்பரம் இந்தியன் எஸ்பிரஸ் இதழில் அக்ராஸ் தி அஸ்லி என்ற தலைப்பில் கட்டுரை எழுதிவருகிறார். சிறைக்கு சென்றதால் அவரால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் அந்த தொடர் தொடங்குகிறது என்று ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தைப் பற்றி அவதூறாக பதிவிட்டவரை மிரட்டியதாக கார்த்தி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ப.சிதம்பரம் இந்தியன் எஸ்பிரஸ் இதழில் அக்ராஸ் தி அஸ்லி என்ற தலைப்பில் கட்டுரை எழுதிவருகிறார். சிறைக்கு சென்றதால் அவரால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் அந்த தொடர் தொடங்குகிறது என்று ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

karthi

அதற்கு பிரகாஷ் பல்வாடி பட்டேல் என்ற நபர், “நீங்களும் உங்கள் மகனும் எப்படி பணம் சம்பாதித்தீர்கள் என்று அந்த திறன் பற்றியும் எழுதுங்கள். இது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சுப்ரியா சுலே 10 ஏக்கர் நிலத்தை வைத்து சம்பாதிப்பது எப்படி என்று சொல்லட்டும்” என்று விஷமத்தனமாக ட்வீட் செய்திருந்தார்.

karthi

இந்த கமெண்ட் செய்தவரை ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி மிரட்டினார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அந்த நபர் கூறுகையில், “என்னுடைய ஆலோசனை வேண்டுமா. என்னுடைய அலுவலகம் வாருங்கள்” என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார் கார்த்தி என்று கூறி அதன் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
கார்த்தி இப்படி மிரட்டல் விடுப்பது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்பு, மாதவ் என்பவர் கூட கார்த்தி தன்னை மிரட்டினார் என்று கூறி ட்விட்டரில் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டிருந்தார்.