ட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா!!!

 

ட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா!!!

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்

புதுதில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்.

தற்போது உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் களத்தில் இயங்குவதை விட ட்விட்டர் தளத்தில் இயங்குவதே அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் ஏராளமானோர் பின் தொடரும் ட்விட்டரில், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகள், விமர்சனங்கள், அறிவிப்பு, புகைப்படங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கணக்கு தொடங்கியுள்ளார். அவரது கணக்கை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆனால், இதுவரை அவர் எந்த ஒரு ட்வீட்டும் பதிவிடவில்லை.

அதேசமயம், இந்தக் கணக்கைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் பிரியங்காவை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். தற்போது வரை பிரியங்காவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, 56,000-க்கும் மேலாக உள்ளது.