‘ட்ரான்ஸ்பர் கொடு இல்லை பணத்தை கொடு ‘-பணத்தை திருப்பிக்கேட்ட அதிகாரி ,பிணமானார் ..

 

‘ட்ரான்ஸ்பர் கொடு இல்லை பணத்தை கொடு ‘-பணத்தை திருப்பிக்கேட்ட அதிகாரி ,பிணமானார் ..

தெலுங்கானாவில் ALO (உதவி தொழிலாளர் அதிகாரி )வாக இருந்த ஆனந்த் ரெட்டி என்ற அதிகாரி தனக்கு கம்மமில் இருந்து வாரங்கலுக்கு  இடமாற்றம் கேட்டு TRS கட்சியை சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரான பிரதீப் ரெட்டியிடம் 1 கோடி ரூபாய் பணம் கொடுத்தார். இதற்கிடையில் பிரதீப்ரெட்டி  அந்த கட்சியிலிருந்து செல்வாக்கை இழந்தார்.

தெலுங்கானாவில் ALO (உதவி தொழிலாளர் அதிகாரி )வாக இருந்த ஆனந்த் ரெட்டி என்ற அதிகாரி தனக்கு கம்மமில் இருந்து வாரங்கலுக்கு  இடமாற்றம் கேட்டு TRS கட்சியை சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரான பிரதீப் ரெட்டியிடம் 1 கோடி ரூபாய் பணம் கொடுத்தார். இதற்கிடையில் பிரதீப்ரெட்டி  அந்த கட்சியிலிருந்து செல்வாக்கை இழந்தார். அதனால் அந்த ALO ஆனந்த் ரெட்டி அந்த அரசியல்வாதியிடம் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டார். ஆனால் அந்த பிரதீப் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார்.

kolai

ஆனால் ஆனந்த் மீண்டும் பணத்தை கேக்கவே அவர் தனக்கு ஒரு பண்ணைகள் இருப்பதாகவும் பணத்துக்கு பதில் அந்த பண்ணையை தங்களுக்கு கொடுப்பதாக கூறி அதிகாரியை அங்கு வரவழைத்தார். பிறகு அங்கு வைத்து அவரை கொலை செய்துள்ளார். மார்ச் 7 ந்தேதிக்கு பிறகு காணாமல் போன ALO வை தேடி அவரது மைத்துனர் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ALO வை பிரதீப் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரது உடலும் மீட்கப்பட்டது.