டைவர்ஸ் ஏன் அதிகமாகுது தெரியுமா..? ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்றத கேளுங்க..!

 

டைவர்ஸ் ஏன் அதிகமாகுது தெரியுமா..? ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்றத கேளுங்க..!

மோகன் பகவத் என்பவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவராக இருக்கிறார். அவர் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய சில முக்கியமான செயல்களைக் குறித்து விளக்கினா

மோகன் பகவத் என்பவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவராக இருக்கிறார். அவர் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய சில முக்கியமான செயல்களைக் குறித்து விளக்கினார்.

ஆர்.எஸ்.எஸ் உட்பட எல்லா காவி இயக்கங்களுமே பெண்களுக்கு கல்வியும், சுதந்திரமும் தேவையற்றவை என்று தொடர்ந்து சொல்லி வரும் நிலையில் நேற்றைய மோகன் பகவத்தின் பேச்சு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை மிகவும் குழப்பி இருக்கிறது. சமீபகாலமாக சமூகத்தில் விவாகரத்துக்கள் அதிகமாகி வருவதைச் சுட்டிக்காட்டிய மோகன் பகவத், அதற்கான காரணங்கள் என்ன என்று சொல்லி அவர்களை வியக்க வைத்தார்.

mohan-bhagwat-01

சமூகத்தில் இப்போது ஏற்பட்டு இருக்கும் கல்வி வளற்சியும்,செல்வமுமே விவாகரத்துகள் அதிகரிக்கக் காரணம் என்றார்.கல்வி அறிவும்,கையில் காசும் சேர்வதால் கர்வம் அதிகரிக்கிறது. சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் மோதல் வருகிறது அதனால்தான் மணமுறிவுகளின் எண்ணிக்கை கூடுகிறது என்றார்.குடும்பங்கள் சேர்ந்ததுதான் சமூகம்,குடும்ப உறவுகள் வலிமையாக இருந்தால்தான் சமூகம் வலிமையானதாக இருக்கும்.சமூகத்தில் பாதி பெண்கள் அவர்களை நாம் கவனமாக வழிநடத்த வேண்டும் என்று அவர் பேசிக்கொண்டு போக.ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்,உண்மையிலேயே தங்கள் தலைவர் என்ன சொல்கிறார் : கல்வியும்.,வளமும் வேண்டுமா,வேண்டாமா என்று விழி பிதுங்கி நின்றிருக்கிறார்கள்.