டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி கூறிய பிரஷாந்த் கிஷோர்! – அதிர்ச்சியில் அ.தி.மு.க
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் பணியாற்றி வந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று பா.ஜ.க தீயாக வேலை செய்தது. ஆனாலும் பிரஷாந்த் கிஷோரின் வியூகத்தின் முன் அது செல்லுபடியாகவில்லை. ஆம் ஆத்மி 58 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்த டெல்லி மக்களுக்கு பிரஷாந்த் கிஷோர் நன்றி கூறியுள்ளார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் பணியாற்றி வந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று பா.ஜ.க தீயாக வேலை செய்தது. ஆனாலும் பிரஷாந்த் கிஷோரின் வியூகத்தின் முன் அது செல்லுபடியாகவில்லை. ஆம் ஆத்மி 58 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
Thank you Delhi for standing up to protect the soul of India!
— Prashant Kishor (@PrashantKishor) February 11, 2020
பா.ஜ.க-வுக்கு 12 இடங்களே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பிரஷாந்த் கிஷோர் டெல்லி மக்களுக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டெல்லிக்கு நன்றி” என்று கூறியுள்ளார். பலரும் பிரஷாந்த் கிஷோரின் பதிவை ரீட்வீட், லைக் செய்து வருகின்றனர்.
தமிழகத்திலும் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி, அதிகாரம், பண பலம் என்று அனைத்தும் இருந்தும் பா.ஜ.க-வால் டெல்லியை பிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நமது நிலை என்ன ஆகும் என்ற கலக்கம் இப்போதே அ.தி.மு.க-வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.