டெல்லி வன்முறை: உளவுத்துறையின் தோல்வியே காரணம்- ரஜினிகாந்த்

 

டெல்லி வன்முறை: உளவுத்துறையின் தோல்வியே காரணம்- ரஜினிகாந்த்

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப்பெறப்படும் என்ற நம்பிக்கை இல்லை. மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறாது. டெல்லி போராட்டத்திற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன். அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம் ஆனால்  போராட்டம் நடத்தக்கூடாது. 

ரஜினி

ட்ரம்ப் போன்ற தலைவர் டெல்லி வந்திருக்கும் சமயத்தில் மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியார்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கே நிற்பேன்.சில கட்சிகள் மதத்தை வைத்து தூண்டிவிடுகிறார்கள் இது சரியான போக்கு கிடையாது. இதனை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் வருங்காலத்தில் பெரிய பிரச்சனையாகிவிடும்” எனக் கூறினார்