டெல்லி வன்முறை: இது வெறும் ட்ரெய்லர் தான்! தமிழ்நாடு முழுக்க இருக்கு!!- திருமாவளவன்

 

டெல்லி வன்முறை: இது வெறும் ட்ரெய்லர் தான்! தமிழ்நாடு முழுக்க இருக்கு!!- திருமாவளவன்

டெல்லி வன்முறை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தலைவர் தொல் திருமாவளவன் என தெரிவித்துள்ளார். 

டெல்லி வன்முறை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தலைவர் தொல் திருமாவளவன் என தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தலைவர் தொல் திருமாவளவன், “டெல்லி வன்முறை குறித்து ரஜினி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக சத்தியாக தன்னை காட்டிக்கொள்ளும் யாரும் அவர்கள் பாஜகவில் இருந்தாலும் கூட கண்டித்து தான் ஆகவேண்டும் என்ற நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நண்பர் ரஜனி காந்த் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

thirumavalavan

கடந்த சில நாட்களாக டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைப்பெற்று வரும் வன்முறை என்பது திட்டமிட்டு நடத்தப்படும் மதவெறியாட்டம். இது ஒரு ஒத்திகை இந்தியா முழுவதும் இத்தகைய வன்முறையை நடத்த மதவெறி கும்பல்கள் தயாராகி உள்ளனர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயித்தங்களுடன் வீதியில் வந்து இஸ்லாமியர்களை தாக்குகிறார்கள். இந்த போக்கை விடுதலை சிறுத்தை வன்மையாக கண்டிக்கிறது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது அமைச்சரின் விருப்பப்படி செயல்படுகிறது.டெல்லி வன்முறை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.