டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில நடுக்கம்!

 

டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில நடுக்கம்!

கிழக்கு டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில்  நில அதிர்வு  உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கதால் குடியிருப்பு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளதால் வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிழக்கு டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில்  நில அதிர்வு  உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கதால் குடியிருப்பு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளதால் வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. இது ரிக்டரில் 4.1 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ttn

நில அதிர்வை சுட்டிக்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.