டெல்லி இந்தியா கேட் அருகில் இரண்டு சொகுசுப் பேருந்துகளில் வெளிநாட்டினர்!

 

டெல்லி இந்தியா கேட் அருகில் இரண்டு சொகுசுப் பேருந்துகளில் வெளிநாட்டினர்!

இந்தியா கேட் அருகில் இரண்டு சொகுசுப் பேருந்துகளில் வெளிநாட்டினர் சுற்றுலா சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி: இந்தியா கேட் அருகில் இரண்டு சொகுசுப் பேருந்துகளில் வெளிநாட்டினர் சுற்றுலா சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காவல்துறை கடந்த புதன்கிழமை இந்தியா கேட் அருகில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் கூடிய இரண்டு சொகுசுப் பேருந்துகளை தடுத்து நிறுத்தியது. அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் ஸ்பெயினிலிருந்து வந்தவர்கள் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கால் ரிஷிகேஷில் அவர்கள் சிக்கித் தவித்ததாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

ttn

அவர்கள் தங்கள் நாட்டுக்கு செல்ல ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் விமான நிலையத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருந்ததால் அவர்களை போலீசார் செல்ல அனுமதித்தனர். முன்னதாக இரண்டு பேருந்துகளை தடுத்து அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் செய்தியாளர்களிடம் சரியான தகவல்களை கொடுக்காததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.