டெல்லியை தவிர்க்க முடியாது: கமல்ஹாசன் திட்டவட்டம்

 

டெல்லியை தவிர்க்க முடியாது: கமல்ஹாசன் திட்டவட்டம்

டெல்லியை தவிர்த்துவிட்டு யாரும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கோவை: டெல்லியை தவிர்த்துவிட்டு யாரும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது செயல்பாடு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அவர், பாஜகவின் மென்மை வடிவம் எனவும், தமிழகத்தில் திராவிட அரசியலை ஒதுக்கிவிட்டு தேசிய கண்ணோட்ட அரசியலை காலூன்ற முயல்கிறார் என்ற விமர்சனங்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியை தவிர்த்துவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என கூறியுள்ளார்.