டெல்லியில் மகனின் ராஜ்ஜியத்தை நிலை நாட்ட ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு… ஆதரவாளர்கள் அதிர்ச்சி..!

 

டெல்லியில் மகனின் ராஜ்ஜியத்தை நிலை நாட்ட ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு… ஆதரவாளர்கள் அதிர்ச்சி..!

ஜெயலலிதாவிடம் என்னை போட்டு கொடுத்து கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க இவரும் ஒரு காரணம்.

நாடாளுமன்ற தேர்தலில் சீட்டும் கிடைக்கவில்லை. ராஜ்யசபாவில் சீட்டும் கொடுக்கவில்லை என அதிர்ச்சியில் ஆழ்ந்து ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் சிந்தினார் ராஜ்யசபா முன்னால் எம்.பியான மைத்ரேயன். அதை நினைத்து அமைச்சர் ஜெயகுமார் ரசித்து ரசிது சிரித்தாராம். ‘ ஜெயலலிதாவிடம் என்னை போட்டு  கொடுத்து கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க இவரும் ஒரு காரணம். அந்தம்மா இல்லாததால் இப்போது கண்ணை கசக்கி என்ன பயன்? பாஜகவுக்கு  உளவு கொடுத்துகிட்டு இருந்தார். maitreyan

அப்படி இருந்ததால் பாஜக தலைமையின் நெருக்கடிக்கு பயந்து  தனக்கு சீட் கொடுப்பார் என நினைத்தார். பிரிவினை வந்தபோது ஓ.பிஎஸுக்கு நெருக்கமாக இருந்தார். இப்படி பல விஷயங்கள் இருந்தும் ஏறக்குறைய கட்சியில் வெறும் அடிப்படை உறுப்பினர் ரேஞ்சுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் எடப்படியும், ஓபிஎஸும். ops

குறிப்பாக அதிமுகவினர் இதுகுறித்து பேசும் போது,  ’தன் மகன் டெல்லிக்கு போனதால் மைத்ரேயனுக்கு  மீண்டும் சீட் கொடுத்தால் தன் மகன் ராஜ்ஜியம் சரிந்துவிடும் என்ற பயமும் ஓ.பிஎஸ் மைத்ரேயனை கழற்றி விட  முக்கிய காரணம். உட்கட்சி விஷயம் மற்றும் தன்னுடைய ஆள் உளவு பார்க்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தன் மாவட்டத்தை சேர்ந்தவரையே ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்து விட்டார். OPR

 இதனால் ரொம்ப குஷியானது யார்  என்றால் அமைச்சர் ஜெயகுமார் தான்.  என்னை பதவியில் இருந்து தூக்கினாங்க, நான் அழுதேனா… கட்சி வேலை பார்க்கல… அதேபோல அவரை கட்சி வேலை பார்க்க சொல்லுங்க…எனறு அமைச்சர் ஜெயகுமார் சொல்லி சிரித்து வருகிறார்.