டெல்லியில் தொடரும் வன்முறை… கண்டதும் சுட உத்தரவு… பலி எண்ணிக்கை 18ஐ தாண்டியது!

 

டெல்லியில் தொடரும் வன்முறை… கண்டதும் சுட உத்தரவு… பலி எண்ணிக்கை 18ஐ தாண்டியது!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டங்கள் நடந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டத்தில் குதித்தது. இதிலிருந்து வன்முறை தொடங்கியது. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மோதல் காரணமாக வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் 18க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

delhi-violence-89

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டங்கள் நடந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டத்தில் குதித்தது. இதிலிருந்து வன்முறை தொடங்கியது. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மோதல் காரணமாக வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.

delli-violence

கல்வீச்சு, கடைகளுக்குத் தீவைப்பு, வாகனங்கள் எரிப்பு என்று தொடர்ந்து பல அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரத்தில் ஒரு போலீஸ்காரர் உள்பட 18 பேர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், டெல்லியில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 6 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பான செய்தியை கவர் செய்த டி.வி, பத்திரிகை ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய உள்துறை அமைச்சகத்தின் மீது பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில், போலீஸை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.