டெல்லியில் சிலிண்டர் வெடித்து விபத்து: 7 பேர் பரிதாப பலி

 

டெல்லியில் சிலிண்டர் வெடித்து விபத்து: 7 பேர் பரிதாப பலி

டெல்லியில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லி: டெல்லியில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லி சுதர்சன் பார்க்கில் 2 மாடிகளை கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்தது. இதனால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்டிடத்தின் உரிமையாளரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.