டெல்லியில் ஏர்டெல் போன் கால் மற்றும் இணையச் சேவை முடக்கம் !

 

டெல்லியில் ஏர்டெல் போன் கால் மற்றும் இணையச் சேவை முடக்கம் !

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்டெல் போன் கால்கள் மற்றும் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

TTT

போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்தும் நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இதனால் போராட்டங்களை நிறுத்துவதற்காக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

ttn

போராட்டங்கள் நடைபெறும் டெல்லி, உத்திர பிரதேசம், கர்நாடகா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏர்டெல் போன் கால்கள் மற்றும் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. 
இன்று காலை 10 மணி முதல் மத்திய அரசின் உத்தரவின் படி ஏர்டெல் நிறுவனம் அப்பகுதிகளில் சேவையை முடக்கியுள்ளது. மேலும், ஜியோ மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களும் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.