டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி

 

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 81 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 11 ஆயிரத்து 760 பேருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 4406 பேர் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

ttn

இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வேலை பார்த்து வந்த பணியாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த பணியாளர் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த சிறப்பு ரயிலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.