டெல்டா மக்களுக்கு விரைந்து உதவுங்கள்: மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

 

டெல்டா மக்களுக்கு விரைந்து உதவுங்கள்: மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மத்திய அரசு விரைந்து உதவிட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மத்திய அரசு விரைந்து உதவிட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலையச் செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்கள் என டெல்டா மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

தமிழக அரசும் முழுமையான அளவிற்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில், “புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத் துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன். தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று தாமதிக்கப்படும் நிதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும். காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்” என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.