டெம்போவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் !

 

டெம்போவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் !

50 மூட்டைகள் மற்றும் 80 அட்டைப் பெட்டிகளில் பான்மசாலா குட்கா போன்றவை இருப்பது அம்பலமானது.

சேலம் மாவட்டம், வீரகனூர் ராயபுரம் பகுதியில் குமரன் என்பவருக்குச் சொந்தமாகத் தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்திற்குள் அடிக்கடி ரகசியமாக ஒரு வேன் வந்து போவதை அப்பகுதி மக்கள் கவனித்துக் கொண்டே வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அந்த தோட்டத்துக்குச் சென்று காவல்துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சோதனை மேற்கொள்ளும் போதே அங்கு ஒரு டெம்போ நின்று கொண்டிருந்துள்ளது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில், 34 மூட்டைகள் பான் மசாலா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

kutka

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், 50 மூட்டைகள் மற்றும் 80 அட்டைப் பெட்டிகளில் பான்மசாலா குட்கா போன்றவை இருப்பது அம்பலமானது. அதுமட்டுமின்றி, அந்த 80 அட்டைப் பெட்டிகளிலும் 50 கிராம் வெள்ளிக் காசுகள் இருந்துள்ளன. அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் குமரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப் பொருட்களும் சேர்த்து ரூ. 1 கோடி மதிப்பு இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.