டெங்கு காய்ச்சல் பாதிப்பு: 9 வயது சிறுமி உயிரிழப்பு!

 

டெங்கு காய்ச்சல் பாதிப்பு: 9 வயது சிறுமி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் பாதிப்பால்  மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: டெங்கு காய்ச்சல் பாதிப்பால்  மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் ஐஸ்வர்யா. 9 வயதான ஐஸ்வர்யா  அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இவருக்கு சில நாட்களாகவே காய்ச்சல் இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றபோது, அவர் டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அதற்காகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா நேற்று உயிரிழந்தார்.

இவருடன் சேர்த்து மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.