டெங்குவிற்கு சென்னையை சேர்ந்த  மேலும் ஒரு சிறுமி பலி 

 

டெங்குவிற்கு சென்னையை சேர்ந்த  மேலும் ஒரு சிறுமி பலி 

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை முகப்பேர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆறு வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

dengue

இந்நிலையில் இன்று மேலும் ஒரு சிறுமி உயிரிழந்தது பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வெகுவாக பரவிவரும் டெங்கு காய்ச்சலால் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகிய அறிகுறிகள் தென்படும். ஓரிரு நாட்களில் குணமடையாத காய்ச்சலும் சளியும் கூட டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில் இன்றும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். அந்த சிறுமி மாங்காடு பகுதியை சேர்ந்தவர்.