டீ குடித்தவர்களிடம் காசு கேட்டதால் விபரீதம்! டீக்கடைக்காரர் வெட்டி சாய்த்த கும்பல்!! 

 

டீ குடித்தவர்களிடம் காசு கேட்டதால் விபரீதம்! டீக்கடைக்காரர் வெட்டி சாய்த்த கும்பல்!! 

மதுரையில் டீக்கடை உரிமையாளரை கடைக்குள் வைத்து கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டீ குடித்தவர்களிடம் காசு கேட்டதால் விபரீதம்! டீக்கடைக்காரர் வெட்டி சாய்த்த கும்பல்!! 

மதுரையில் டீக்கடை உரிமையாளரை கடைக்குள் வைத்து கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை கிருஷ்ணாபுரம் காலணி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்திவருகிறார். இன்று காலை டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் பணம் கொடுக்காமல் டீ கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே டீ கடைக்குள் உள்ளே  நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டியும் , அங்கிருந்த கண்ணாடியை கொண்டு குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் . படுகாயம் அடைந்தவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலே மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். ’

உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய தல்லாகுளம் காவல்துறையினர் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர .
 அதிகாலையில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது