டீ , காபி குடிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்த நடிகர் சிவகுமார்: கலாய்த்த எஸ். வீ. சேகர்

 

டீ , காபி குடிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்த நடிகர் சிவகுமார்: கலாய்த்த எஸ். வீ. சேகர்

சென்னை:  மும்மொழி கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்ததையடுத்து  நடிகர் சிவகுமாரை எஸ் வீ  சேகர் விமர்சித்துள்ளார். 

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, இந்தி திணிப்பு குறித்துப் பேசியிருந்தார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  குறிப்பாக பாஜக  தேசியச் செயலாளர் ஹெச். ராஜா. சூர்யா வன்முறையைத் தூண்டுகிறார் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய அவரது தந்தையும் நடிகருமான சிவகுமார், ‘என் பிள்ளைகளாக இருந்தால் டீ , காபி குடிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருந்தார்.

 

இதுகுறித்து  பாஜக தொண்டரும் நடிகருமான எஸ் வீ  சேகர், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிவகுமாரின் கருத்தைக் கலாய்க்கும் வகையில், ‘ஆனால் என் குழந்தைகள் காபி விளம்பரத்தில்  நடிக்கலாம்’  என்று கூறி விமர்சித்துள்ளார். எஸ் வீ  சேகரின் இந்த கருத்துக்கு ஆதரவாகச்  சிலரும் எதிராகச் சிலரும் கருத்து கூறி வருகின்றனர்.