டீச்சருக்கு மூணாங்கிளாஸ் குழந்தைகள் கொடுத்த பரிசு! நெகிழ வைக்கும் நிஜ சம்பவம்!

 

டீச்சருக்கு மூணாங்கிளாஸ் குழந்தைகள் கொடுத்த பரிசு! நெகிழ வைக்கும் நிஜ சம்பவம்!

இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது. நல்ல ஆசிரியராக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வழக்கம்.

இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது. நல்ல ஆசிரியராக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வழக்கம். அப்படி இன்று நடந்த ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் சம்பவம் ஒன்றும் நடந்து முடிந்திருக்கிறது.

teacher

இன்று எல்லோரும் தங்களது ஆசிரியர்களை நினைவுபடுத்தும் விதமாக வாழ்த்துகளும், பரிசுகளும் கொடுத்து கொண்டாடிக் கொண்டிருந்த போது மதுரை அருகே உள்ள குளத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் தங்களது ஆசிரியை தனலட்சுமிக்கு சில்லரை நாணயங்களை அன்பு பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த செயல் சோஷியல் மீடியாவில் வைரலாகி, குழந்தைகளின் கள்ளமில்லாத அன்பைப் பார்த்த அனைவரையும் நெகிழச் செய்துள்ளது!