டி.டி.வி.,யால் தெருவுக்குக் கூட போக முடியாத சசிகலா… போட்டுக் கொடுக்கும் புகழேந்தி..!

 

டி.டி.வி.,யால் தெருவுக்குக் கூட போக முடியாத சசிகலா… போட்டுக் கொடுக்கும் புகழேந்தி..!

சசிகலாவின கூடாரத்தில் வெளியேறிய பெங்களூரு புகழேந்தி மீண்டும் அதிரடி மன்னார்குடி குடும்பத்திற்கு பலமான அடி கொடுத்துள்ளார்.

சசிகலாவின கூடாரத்தில் வெளியேறிய பெங்களூரு புகழேந்தி மீண்டும் அதிரடி மன்னார்குடி குடும்பத்திற்கு பலமான அடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் சசிகலா வருமான வரித்துறையில் தாக்கல் செய்தார் ஒரு மனுவில் கொடநாடு எஸ்டேட் சொத்து தனக்கு தான் சொந்தம் என தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை மாநிலம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியாகினர். ஆனால், ஆட்சியில் இருக்கிற அமைச்சர்களில்  இருந்து முதல்வர் வரைக்கும் இந்த விவகாரம் தொடர்பாக யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அடுத்து விவேக் ஜெயராமனுக்கு சசிகலா கைப்படியாக எழுதிய கடிதமும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது.ttv dhinakaran

அதில் சசிகலா வழக்கறிஞர் இது சசிகலா எழுதிய கடிதம் தான் என்பதை நிரூபித்துள்ளார். ஆனால் அது சசிகலா எழுதிய கடிதம் இல்லை. வாட்ச்மேன் வந்து கொடுத்து விட்டு போனார் என வருமான வரித்துறையிடம் மலுப்பியுள்ளார் விவேக் ஜெயராமன். சரியாக கணித்துப்பார்த்தால் சசிகலா குடும்பத்தை பற்றி எல்லாம் அறிந்த புகழேந்தி மூலம் தான் 1600 கோடி ரூபாய் சொத்துகள் பண மதிப்பிழப்பீட்டின் போது அதாவது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வாங்கி இருக்கிறார் சசிகலா.

இந்த 1600 கோடி ரூபாய் சொத்துகள் வாங்கிய விவகாரம் வருமான வரித்துறையினரால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் விவகாரம் எப்போதோ வெளியாகி இருக்கும்.  ஆனால் பெங்களூரு புகழேந்தி எப்போது டி.டி.வியால் வெளியேற்றப்பட்டாரோ அதற்கடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு வெளியாகி இருக்கிறது.

 sasikala

ஆக மொத்தத்தில் சசிகலாவின் குடும்பத்தை அறிந்த புகழேந்தி மூலம் பாஜகவும், அதிமுகவும் அனைத்தையும் வெளியிட்டு டி.டி.வியை அடக்கியது போல சசிகலா வெளியே வந்த பிறகும் அடக்கி விடும் தந்திரத்தில் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் தானோ என்னவோ சசிகலா குடும்பத்தில் என்னைத் தெரியாமல் ஓர் அணுவும் அசையாது என சசிகலாவை நம்பி டி.டி.வியை விட்டு விலகும்போது சொன்னாரோ புகழேந்தி..?