டி.டி.வி.தினகரனுக்கு சம்பட்டி அடி… அமமுகவை காலியாக்க  எடப்பாடி அதிரடி திட்டம்..!

 

டி.டி.வி.தினகரனுக்கு சம்பட்டி அடி… அமமுகவை காலியாக்க  எடப்பாடி அதிரடி திட்டம்..!

டி.டி.வி.தினகரன்  கட்சியின் படுதோல்வியை பயன்படுத்தி அக்கட்சியை உடைக்க ஓ.பி.எஸ்., எடப்பாடி இருவரும்  திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.  9 எம்.எல்.ஏ., சீட்டில் வெற்றிபெற்றது, போன்ற பிளஸ் பாயின்ட்டுகளை அடுக்கி டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து ஆட்களை இழுக்கிறார்கள்.  அதற்கான அறிக்கையையும் ஓப்பனாகவே வெளியிட்டது அதிமுக

டி.டி.வி.தினகரன்  கட்சியின் படுதோல்வியை பயன்படுத்தி அக்கட்சியை உடைக்க ஓ.பி.எஸ்., எடப்பாடி இருவரும்  திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.  9 எம்.எல்.ஏ., சீட்டில் வெற்றிபெற்றது, போன்ற பிளஸ் பாயின்ட்டுகளை அடுக்கி டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து ஆட்களை இழுக்கிறார்கள்.  அதற்கான அறிக்கையையும் ஓப்பனாகவே வெளியிட்டது அதிமுக. இப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுகவுக்கு  தயக்கம் இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் சேர்மன் பதவி தருகிறோம் என சொல்லி இழுக்கிறார்கள்.  

ttv

இதை பார்த்து டி.டி.வி தரப்பு  பதற்றம் அடையவில்லை. யார் வேண்டுமானாலும் போகலாம் என்று  கூறிவிட்டார். அந்த அளவுக்கு விரக்தியில் இருக்கிறார் டி.டி.வி.  தொண்டர்கள் போன பிறகு யாரை வைத்து அவர் கட்சியை நடத்தப்போகிறார் என்று மன்னார்குடியில் இருந்து இன்னொரு குரல் கேள்வி எழுப்பி வருகிறது. 

o.p.s and e.p.s

அதன்படி முதல் அல்வாவை டி.டி.வி.,க்கு திருநெல்வேலி கொடுத்துவிட்டது. கூட்டுறவு சங்க தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் டி.டி.வி தரப்புதான் அசத்தியது. அமமுக படுதோல்விக்கு பிறகு முதன்முதலாக ஒரு முன்னாள் எம்எல்ஏ அதிமுகவுக்கு தாவி டி.டி.வி.க்கு  முதல் அல்வா கொடுத்து விட்டார்.  அடுத்தடுத்து பல மாவட்டங்களில் டி.டி.வி.,க்கு அல்வா தயாராகி வருகிறது.