“டி.டி.வி.,கொடுத்த பணத்தை பதுக்கீட்டீங்களா..?” கடைசி நேரத்தில் தவிக்கும் அமமுக வேட்பாளர்கள்..!

 

“டி.டி.வி.,கொடுத்த பணத்தை பதுக்கீட்டீங்களா..?” கடைசி நேரத்தில் தவிக்கும் அமமுக வேட்பாளர்கள்..!

ஆர்.கே.நகர் ஃபார்முலாவை போல ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாயை டி.டி.வி அணி கொடுக்கப்போவதாக நம்பி சில கிராமங்களில் வேலைக்கு போகாமல் வீட்டில் ஒருவரை விட்டுவிட்டு மற்றவர்கள் வேலைக்கு போகிறார்களாம்

டி.டி.வி.தினகரன் தரப்பு வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுப்பதாக யாரோ வதந்தி கிளப்பி விட இப்போது மக்கள் அமமுக மீது விரக்தியில் உள்ளனர். 

ஆர்.கே.நகர் ஃபார்முலாவை போல ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாயை டி.டி.வி அணி கொடுக்கப்போவதாக நம்பி சில கிராமங்களில் வேலைக்கு போகாமல் வீட்டில் ஒருவரை விட்டுவிட்டு மற்றவர்கள் வேலைக்கு போகிறார்களாம். அப்படி சென்ற பிறகும் பணம் வீட்டில் இருப்பவர்களிடம்  பணம் வந்துவிட்டதா? எனக் கேட்டு வேலைக்கு போனவர்கள் நச்சரித்து வருகின்றனர். இதை எதிர்பார்க்காத அமமுக-வினர் போகும் இடமெல்லாம் ’எங்க வீட்டுல நாலு ஓட்டு எப்போது 20 ஆயிரம் வரும்’னு நச்சரித்து வருகிறார்கள். 

ttv cooker

ஆனால், ’நாங்க அப்டி சொல்லவேயில்லை’ என வேட்பாளர் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் மக்கள் நம்ப மறுக்கிறார்கள். ’’டி.டி.வி.தினகரன் கொடுத்த பணத்தை நீங்களே பதுக்கி வைச்சுகிட்டீங்களா? எங்களை ஏமாத்த நினைக்காதீங்க. அப்புறம் ஓட்டு மாறிப்போயிடும்’ எனச் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். 

ttv campaign

உண்மையை நிலவரத்தை உணர்ந்து கொள்ளாமல் மக்கள் அதிருப்தியை சம்பாதிக்கும் அமமுக-வினர் ‘’இதெல்லாம் அதிமுக தரப்பினர் கிளப்பி விடும் வதந்தி. இப்போது அந்தந்த வேட்பாளர்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு போய் ஓட்டு கேட்காத குறைதான். இதனை மனதில் வைத்தே கொஞ்சம் பணத்தையாவது இறுதிக் கட்டத்தில் மக்களுக்கு கொடுப்போம் என பணப்பட்டுவாடாவுக்கு தயாராக வைத்திருந்த பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்து விட்டது. இதனால், கிடைக்க வேண்டிய ஒட்டுக்களும் விழாமல் போகுமோ என விழிபிதுங்கி நிற்கிறது டி.டி.வி அணி.

இதையும் வாசிங்க

300 கொடுத்தா கேஸ், 2,000 கொடுத்தா மாஸ்; ஆண்டிபட்டி தேனியில் அதிமுகவினர் அராஜகம்?!..