டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் சூதாட்டமா?

 

டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் சூதாட்டமா?

நடந்து முடிந்த டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் பி.சி.சி.ஐ விசாரித்து வருகிறது. 

நடந்து முடிந்த டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் பி.சி.சி.ஐ விசாரித்து வருகிறது. 

தமிழகத்தில் பெரும் வரவேற்பும் எதிர் பார்ப்பும் கூடிய டி.என்.பி.எல் இந்த ஆண்டின் தொடர் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த ஆட்டத்தில்,  சென்னையை சேர்ந்த அணியான, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 2017 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்ததை அடுத்து இந்த ஆண்டும்(2019)  முதல் இடத்தை பிடித்தனர். 

TNPL 2019

இதில் சில இந்திய கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டதால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக மக்களிடையே பேராதரவு பெற்றது. தற்போது இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நிகழந்ததாக  பி.சி.சி.ஐ க்கு தகவல் கிடைத்ததன் பேரில் பி.சி.சி.ஐ  விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் ரஞ்சித் டிராபியில் பங்கேற்ற பயிற்சியாளரும், இந்திய கிரிக்கெட் வீரரின் ஒருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இன்னும் உறுதியாக யாரெல்லாம் அந்த சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.