டி.என்.ஏ சோதனை நடத்தி நிரூபிக்க வேண்டும்… மைக்கேல் ஜாக்சன் போல் உள்ளவரை நெருக்கும் ரசிகர்கள்!
பாப் இசை, நடன உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் மைக்கேல் ஜாக்சன் உள்ளார். உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு அதிக அளவில் மருந்துகளை எடுத்துக்கொண்டதால் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்தார். ஆனால், அவர் உயிரிழந்ததை அவருடைய ரசிகர்கள் நம்ப மறுக்கின்றனர்.
மைக்கேல் ஜாக்சன் போல உள்ள அர்ஜென்டினாவின் செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாப் இசை, நடன உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் மைக்கேல் ஜாக்சன் உள்ளார். உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு அதிக அளவில் மருந்துகளை எடுத்துக்கொண்டதால் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்தார். ஆனால், அவர் உயிரிழந்ததை அவருடைய ரசிகர்கள் நம்ப மறுக்கின்றனர்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவைச் சேர்ந்த செர்ஜியோ கோர்ட்ஸ் பார்க்க மைக்கேல் ஜாக்சன் போலவே உள்ளதால் அவரைப் போலவே நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். உலகம் முழுக்க இவருக்கும் வரவேற்பு உள்ளது. மைக்கேல் ஜாக்சனாகவே இவரை ரசிகர்கள் பார்க்கின்றனர். சமீபத்தில் செர்ஜியோ வெளியிட்ட வீடியோ அதிகம் வைரல் ஆனது. அதில், “அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம். நான் உங்களை நேசிக்கிறேன்” என்று செர்ஜியோ கூறியிருந்தார். இதனால், மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்கள் உற்சாகமாகி, செர்ஜியோ தான் மைக்கேல் ஜாக்சன். இறந்துவிட்டதாக நாடகமாடி வருகிறார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர். மேலும், தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை அவர் டி.என்.ஏ பரிசோதனை செய்து நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரசிகர்களின் அளவுகடந்த அன்பால் செர்ஜியோ உற்சாகத்தில் இருக்கிறார். டி.என்.ஏ பரிசோதனை செய்யும் அளவுக்கு ரசிகர்களிடம் இருந்து நெருக்கடி வருவது பற்றி செர்ஜியோவிடம் கேட்டபோது, “நான் மைக்கேல் ஜாக்சன் போலவே இருப்பதாக ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கூறினார். மேலும், மைக்கேல் ஜாக்சன் போல உடை அணிந்து மேக்கப் போடும்படி கூறினார். விளையாட்டாக அதை செய்தேன். அதை அவர் பத்திரிகையில் வெளியிட்டார்… இவ்வளவு புகழ் வந்துவிட்டது. பிறகு அவர் என்னை சில கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் என்னை வைத்து விளம்பரம் எடுத்தார்கள். இவை எல்லாம் தற்செயலாக நடந்துவிட்டது” என்றார். உருவ ஒற்றுமையால் செர்ஜியோ காட்டில் பண மழைதான் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்!