டிரைவர் அலட்சியம்: கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து! 

 

டிரைவர் அலட்சியம்: கண்டெய்னர் மீது கார் மோதி விபத்து! 

கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

அருப்புக்கோட்டை மாவட்டம் பாளையம் பட்டியைச் சேர்ந்த 6 பேர் கோவில்பட்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் புறப்பட்டனர். காரை சுகன் என்ற பெண் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு கண்டெய்னர் ஏற்றிய லாரி ஒன்று சாலை ஓரம் நின்றிருந்தது. அந்த லாரியை, காரை ஓட்டி வந்த பெண் அருகில் வந்த பிறகே கவனித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த லாரியின் பின் பக்கம் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.  அவர்களது உடல்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.