டிரைவருக்காக கதறி அழுது கண்ணிர்விட்ட சீமான்! 

 

டிரைவருக்காக கதறி அழுது கண்ணிர்விட்ட சீமான்! 

அன்புசெழியன் வீட்டுக்குள் நுழைந்த சீமான், அன்புசெழியன் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். தலையில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு குமுறிக் குமுறி அழுவதைப் பார்த்த அவரது தொண்டர்களும் கண்ணீர் விட்டனர். பின்னர் இறுதிச் சடங்கு நிறைவேறும் வரை சீமான் அங்கேயே இருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கார் டிரைவர் அன்பு செழியன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் உடலைப் பார்த்து சீமான் கதறி அழுத காட்சிகளை நாம் தமிழர் கட்சியினர் வைரல் ஆக்கி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் எருக்கூர் அருகே உள்ள தில்லை பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புசெழியன். சீமானின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பு எடுத்து மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த செய்தியைக் கேட்ட சீமான் உடனடியாக நாகை மாவட்டத்துக்கு வந்தார். சீமான் வருகையை அறிந்த நாம் தமிழர் கட்சியினரும் அன்புசெழியன் வீட்டில் குவிய ஆரம்பித்தனர்.

சீமான்

அன்புசெழியன் வீட்டுக்குள் நுழைந்த சீமான், அன்புசெழியன் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். தலையில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு குமுறிக் குமுறி அழுவதைப் பார்த்த அவரது தொண்டர்களும் கண்ணீர் விட்டனர். பின்னர் இறுதிச் சடங்கு நிறைவேறும் வரை சீமான் அங்கேயே இருந்தார். அன்பு செழியனின் உடலை இறுதி பயணத்துக்கு சுடுகாட்டுக்கு சீமான் சுமந்து சென்றார்.

seeman

கார் ஓட்டுநராக இருந்தாலும் அவரையும் தன் தம்பியாக சீமான் கருதிவந்தது அந்த பகுதி மக்கள் கண்டு க்ண்ணீர் விட்டனர். சீமானின் இந்த நெஞ்சை உருக்கும் செயலை நாம் தமிழர் கட்சியினர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.