டிராக்டரில் கிடந்த 6 வயது சிறுமியின் சடலம்.. பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. சிக்கிய சிறுவர்கள் !

 

டிராக்டரில் கிடந்த  6 வயது சிறுமியின் சடலம்.. பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. சிக்கிய சிறுவர்கள் !

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வரும் 6 வயது சிறுமி நேற்று மாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வரும் 6 வயது சிறுமி நேற்று மாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் அந்த பெண்ணை ஊர் முழுவதும் தேடி உள்ளனர். அப்போது அந்த சிறுமி பலத்த காயங்களுடன் வீட்டின் அருகே இருந்த டிராக்டரில்  கிடந்துள்ளார்.

ttn

இதனையடுத்து உடனே அந்த சிறுமியைப் பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

tt

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 14 மற்றும் 16 வயது சிறுவர்கள் 2 பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த வாக்கு ,மூலத்தின் படி டிராக்டர் உரிமையாளர் உமா சேகர் என்னும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பாலியல் வன்கொடுமை செய்து விட்டு விளையாட்டாக டிராக்டரில் போட்டு விட்டதாகவும், அப்போது அந்த சிறுமி தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் சிறுவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 6 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.