டிரஸ் போடாததால் பசு மாட்டை கடத்தி.. பாலியல் வன்புணர்வு செய்த வடமாநில இளைஞர்கள்! | வாயைத் திறக்காத ஹெச்.ராஜா

 

டிரஸ் போடாததால் பசு மாட்டை கடத்தி.. பாலியல் வன்புணர்வு செய்த வடமாநில இளைஞர்கள்! | வாயைத் திறக்காத ஹெச்.ராஜா

நிர்பயாவில் ஆரம்பித்து ஒவ்வொரு முறையும் பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகிற போதும் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழும் புரட்சி காவலர்கள், பெண் சரியாக ஆடை அணியாததே பாலியல் பலாத்காரங்களுக்கான காரணம் என்று வாய் கிழிய பேசுவார்கள். அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த பொள்ளாச்சி சம்பவத்திலும் கூட, பெண்கள் ஏன், யார் கூப்பிட்டாலும் வீட்டிற்குத் தெரியாமல் செல்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள் இந்த சமூக காவலர்கள்.

நிர்பயாவில் ஆரம்பித்து ஒவ்வொரு முறையும் பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகிற போதும் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழும் புரட்சி காவலர்கள், பெண் சரியாக ஆடை அணியாததே பாலியல் பலாத்காரங்களுக்கான காரணம் என்று வாய் கிழிய பேசுவார்கள். அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த பொள்ளாச்சி சம்பவத்திலும் கூட, பெண்கள் ஏன், யார் கூப்பிட்டாலும் வீட்டிற்குத் தெரியாமல் செல்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள் இந்த சமூக காவலர்கள்.
இந்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் தினமும் அருகில் விவசாயி ஒருவர் கட்டி வைத்திருக்கும் பசு மாட்டை கடத்தி சென்று, ஒரு அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

cow

பசு மாடு ஆடை எதுவும் அணியாதது தான் காரணம் என்று இதற்கும் சமூக காவலர்கள் பொங்கி எழுவார்களா என்று சமூக வலைத்தளங்களில் இந்த விஷயத்தை வேகமாக பரப்பி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ளது பெருமா கவுண்டன்பாளையம். இங்கு வசித்து வருபவர் கந்தசாமி என்ற விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. எப்போதுமே இரவு நேரத்தில் நன்றாக இருக்கும் பசுமாடு, காலையில் ஆனதும் பலவீனமாக இருப்பதை கந்தசாமி கவனித்துள்ளார். இது சில நாட்களாக தொடர்ந்ததால், கவலையும், குழப்பமும் அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு பசுமாட்டை வெளியே கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் மாடு கத்தும் சப்தம் கேட்டு விழித்த கந்தசாமி, உடனே வெளியே வந்து பார்த்தார். ஆனால் பசுமாட்டை காணவில்லை. பல இடங்களில் தேட ஆரம்பித்தார். 

north indian

அப்போது அருகில் உள்ள கோழிப்பண்ணை ரூமில் இருந்து சப்தம் வருவதை கவனித்து அதனுள் சென்று பார்த்தார். அப்போது, பசுமாட்டினை அந்த அறையில் வைத்து மூன்று இளைஞர்கள் வன்புணர்வு செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 3 பேரும் அருகில் உள்ள கல்குவாரியில் வேலை செய்பவர்கள் என்றும், 3 பேருமே வடமாநில இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது. 
தினந்தோறும் இரவு நேரத்தில், பசு மாட்டினை கடத்தி சென்று, அருகில் இருக்கும் கோழிப்பண்ணை ரூமில் வைத்து 3 வடமாநில இளைஞர்களும் தொடர்ந்து வன்புணர்வு சித்திரவதை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 3 இளைஞர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police station

சினிமாக்காரர்கள் செய்கிற விஷயங்களுக்கு எல்லாம் உட்கார்ந்து மூன்று மணி நேரம் திரைப்படத்தைப் பார்த்து கருத்து சொல்லி பரபரப்பைக் கிளப்பும் பாஜக தலைவர் ஹெச்.ராஜா இந்த விஷயத்தில் இதுவரையில் வாயைத் திறக்காதது ஏன்? என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி கணைகளைத் தொடுத்து வருகிறார்கள் மக்கள்.