டியூஷன் சென்று வீடு திரும்பாத மாணவன்.. மயக்க ஸ்ப்ரே அடித்துக் கடத்திய நபரை கைது செய்த போலீசார்!

 

டியூஷன் சென்று வீடு திரும்பாத மாணவன்.. மயக்க ஸ்ப்ரே அடித்துக் கடத்திய நபரை கைது செய்த போலீசார்!

டியூஷனுக்கு சென்று பார்க்கலாம் என்று அவர் சென்று கொண்டிருந்த வழியில் ராகுல் பதறியடித்துக் கொண்டு எதிரே ஓடி வந்துள்ளார்.

சென்னை ஆவடியில் உள்ள காமராஜ் நகரில்  ஹரி – சுமதி என்னும் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகுல் என்னும் 10 வயது மகன் இருக்கிறார். ராகுல் அவர்களது வீட்டுக்கு அருகே உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார் . தினமும் ராகுல் டியூஷனுக்கு சென்று தான் படிப்பாராம். அதே போல, நேற்று டியூஷனுக்கு சென்ற ராகுல் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அவரது தாய் அடைந்துள்ளார். 

ttn

உடனே, டியூஷனுக்கு சென்று பார்க்கலாம் என்று அவர் சென்று கொண்டிருந்த வழியில் ராகுல் பதறியடித்துக் கொண்டு எதிரே ஓடி வந்துள்ளார். ராகுலை பார்த்ததும் நிம்மதி அடைந்த அவனது தாய் சுமதி, ஏன் தாமதம், எதற்காக ஓடி வருகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு ராகுல் தன்னை யாரோ மயக்க ஸ்ப்ரே அடித்துக் கடத்தி சென்றுவிட்டதாகவும் அவரிடம் இருந்து தான் தப்பித்து ஓடி வந்ததாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் பயந்து போன சுமதி, ராகுல் கூறிய இடத்துக்குச் சென்று அங்கு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஒரு மர்ம நபர் உட்கார்ந்து கொண்டிருப்பதை அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து, அந்த சிறுவனை கடத்தி சென்ற காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.