டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் ! பங்களாதேஷில் கொடூரம் !!

 

டியூஷனுக்கு சென்ற 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் ! பங்களாதேஷில் கொடூரம் !!

குழந்தையின் குடும்பத்தின் வறுமையை ஆயுதமாக வைத்து டியூசன் டீச்சர் அபுசையத்தின் தம்பி சபீர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஷிப்சார் தாலுக்கா உதவி காவல் கண்காணிப்பாளர் அபிர் ஹுசைன் தெரிவித்தார்.

குடும்ப வறுமையை பயன்படுத்தி டியூசனுக்கு சென்ற 8 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பங்களாதேஷில் நடைபெற்றுள்ளது. 

பங்காளதேஷ் நாட்டின் மதாரிபூர் மாவட்டம் சிப்சார் உபசில்லா அடுத்த அபுகர்கண்டி கிராமத்தில் இளைஞர் ஒருவரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை அடுத்து உடல்நிலை மோசம் அடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் ஒரு டியுஷன் டீச்சரின் தம்பிதான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பாலியல் வன்கொடுமையால் பாதிக்ப்பட்டதை அடுத்து மதரிபூர் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறுமியின் நிலை மோசம் அடையவே, அவள் ஃபரித்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 
குழந்தையின் குடும்பத்தின் வறுமையை ஆயுதமாக வைத்து டியூசன் டீச்சர் அபுசையத்தின் தம்பி சபீர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஷிப்சார் தாலுக்கா உதவி காவல் கண்காணிப்பாளர் அபிர் ஹுசைன் தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து சையத்தின் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர் என்றும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.