‘டியூஷனுக்கு ஏன் போகவில்லை’ எனத் திட்டிய அண்ணன்..கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய தங்கை !

 

‘டியூஷனுக்கு ஏன் போகவில்லை’ எனத் திட்டிய அண்ணன்..கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய தங்கை !

பவித்ரா வீட்டில் இருப்பதைக் கண்ட அவளது அண்ணன், ஏன் டியூஷனுக்கு செல்லவில்லை என்று பவித்ராவை திட்டியுள்ளார். 

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் வசித்து வருபவர் கந்தன். இவரது மகள் பவித்ரா. அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவரது மகள் சிந்து. பவித்ராவும் சிந்துவும் ஒன்றாக 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். பவித்ரா சிந்துவுடன் டியூஷனுக்கும் செல்வாராம். நேற்று பவித்ரா டியூஷனுக்கு செல்லாமல் லீவ் போட்டுள்ளார். பவித்ரா வீட்டில் இருப்பதைக் கண்ட அவளது அண்ணன், ஏன் டியூஷனுக்கு செல்லவில்லை என்று பவித்ராவை திட்டியுள்ளார். 

ttn

இதனால், கோபமடைந்த பவித்ரா அவளின் அண்ணன் திட்டியதை பற்றி அவளது தோழி சிந்துவிடம் கூறியுள்ளார். உடனே, அவர்கள் இரண்டு பேரும் கடைக்கு போவதாக அவரவர் வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இரண்டு பேரும் வெளியே சென்று வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததை எண்ணி அச்சமடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் இவர்கள் இரண்டு பெரும் சென்றது குறித்து ஏதேனும் பதிவாகியுள்ளதா என்று சோதித்து வருகின்றனர்.