‘டியூசனுக்கு வந்த சிறுமி…கணவன் செய்த கொடூரத்தை மறைத்த ஆசிரியை’ ; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

‘டியூசனுக்கு வந்த சிறுமி…கணவன் செய்த கொடூரத்தை மறைத்த ஆசிரியை’ ; அதிர்ச்சி தரும் சம்பவம்!

விஜயலட்சுமி பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்ததும் அங்குள்ள குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. அதேபகுதியில்  உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரது கணவர்  நரேஷ், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். விஜயலட்சுமி பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்ததும் அங்குள்ள குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் நரேஷ், டியூசனுக்கு வந்த 6 வயது சிறுமியிடம் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறியுள்ளார்.  இதனால் சிறுமி கத்தி கூச்சலிட அங்கு வந்த சிறுமியின் அண்ணன்  என்ன நடந்தது என்று விசாரிக்க, சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவன் தனது பெற்றோரிடம் விவகாரத்தைக் கொண்டு செல்ல, அவர்கள் இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

ttn

ஆனால் அதற்குள் விஜயலட்சுமியும் அவரது கணவர் நரேஷும் தலைமறைவாகினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடியதில் பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டில் நரேஷும் விஜயலட்சுமியும் பதுங்கி இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நரேஷ் மற்றும் அதை மறைத்து  உடந்தையாக இருந்த  விஜயலட்சுமி இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த ஆவடி அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.