டியர் மோடி…. இந்தியா- பாகிஸ்தான் இடையே ஓற்றுமை நிலவ வேண்டும்- பாக். பிரதமர்

 

டியர் மோடி…. இந்தியா- பாகிஸ்தான் இடையே ஓற்றுமை நிலவ வேண்டும்- பாக். பிரதமர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். 

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வெற்றிப்பெற்ற பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர், கனட பிரதமர், சீன அதிபர்,ரஷ்ய அதிபர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் தனிப் பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராக 2 ஆவது முறையாக ஆட்சியமைக்கவுள்ள மோடிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.