டிடிவி தினகரன் என்ன 24 ஆம் புலிகேசியா? அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
புகழேந்தியை டிடிவி தினகரன் 23-ம் புலிகேசி என விமர்சித்துள்ளார். அப்படியென்றால் தினகரன் என்ன 24-ம் புலிகேசியா?’’ எனக் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
புகழேந்தியை டிடிவி தினகரன் 23-ம் புலிகேசி என விமர்சித்துள்ளார். அப்படியென்றால் தினகரன் என்ன 24-ம் புலிகேசியா?’’ எனக் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், புகழேந்தியை டிடிவி தினகரன் 23-ம் புலிகேசி என விமர்சிக்கிறார். அப்படியென்றால் டிடிவி தினகரன் என்ன 24-ம் புலிகேசியா? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியே கிடையாது. அது லெட்டர்பேடு கட்சி. ஜெயலலிதாவின் படத்தை அமமுக கட்சிக் கொடியில் போடுவதற்கு அவர்களுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. வேண்டுமென்றால் கட்சிக்கொடியில் சசிகலாவின் படத்தைப் போட்டுக் கொள்ளட்டும்.
இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி தமிழக மக்கள் எங்களுக்கும் எங்கள் அரசுக்கும் வழங்கிய தீபாவளி பரிசு. இந்த வெற்றியின் மூலம் திமுக எனும் நரகாசுரன் அழிய வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்கள் நினைத்துள்ளனர்” எனக் கூறினார்.