டிடிவி தினகரன் அடிக்கடி சந்திக்கும் பிரபல மூக்குப்பொடி சித்தர் காலமானார்!

 

டிடிவி தினகரன் அடிக்கடி சந்திக்கும் பிரபல மூக்குப்பொடி  சித்தர் காலமானார்!

திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த பிரபல மூக்குப் பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று  காலமானார். 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த பிரபல மூக்குப் பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று  காலமானார். 

திருவண்ணாமலையில் ஏகப்பட்ட சாமியார்களைப் பார்க்கலாம். தெருக்களில், சாலைகளில், மண்டபங்களில், மலையில், கோவில்களில் என எங்கு பார்த்தாலும் சாமியார்கள் மயம்தான். அந்த  வரிசையில் திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்  மூக்குப் பொடி சித்தர். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்று கூறப்படுகிறது.

sidhar

இவர் அதிகம் பேச மாட்டார். பச்சை சால்வையுடன் காட்சி தரும் இவர் அடிக்கடி மூக்குப் பொடி போடுவார்.  பெரும்பாலும் மௌனமாகவே இருப்பார். இவர் யாரையாவது நிமிர்ந்து பார்த்தால் அல்லது ஏதாவது பேசினால் அவர்களுக்கு அதுதான் அருளாசி. இவரது  ஒரு வார்த்தைக்காகவே பல மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பர். அ.ம.மு.க.வின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் அடிக்கடி மூக்குப்பொடி சித்தரைச்  சந்தித்து ஆசி வாங்குவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவர், தானே புயல் தாக்குவதற்கு சில நாட்களுக்கு முன் அதனை உணர்த்தும் வகையில் கடலூர் சென்று கடலுக்கு முன் நின்று கொண்டு, சத்தம் போடாதே, அமைதியாக இரு எனக் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக இன்று மூக்குப் பொடி சித்தர் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு  பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.