டிடிவி தினகரனை ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்: தம்பிதுரை அதிரடி பேட்டி!

 

டிடிவி தினகரனை ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்: தம்பிதுரை அதிரடி பேட்டி!

அதிமுக-விற்கு டிடிவி தினகரன் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும்  என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கரூர் : அதிமுக-விற்கு டிடிவி தினகரன் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும்  என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

thambidurai

கரூர் மாவட்டம் தும்பிவாடி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பல்வேறு குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணி அமைப்பது குறித்து தேர்தலின்போது தலைமை முடிவு செய்யும் எனக் கூறிய தம்பிதுரை, இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருப்பது நாடகம் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், அதிமுகவிற்கு டிடிவி தினகரன் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஸ் அதிமுகவில் இணைய அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.