டிடிவி தினகரனால் அனைத்தையும் இழந்து நிற்கிறேன்: புகழேந்தி பேட்டி..!

 

டிடிவி தினகரனால் அனைத்தையும் இழந்து நிற்கிறேன்: புகழேந்தி பேட்டி..!

அமமுக கட்சியின் அதிருப்தி நிர்வாகி புகழேந்திக்கு அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

அமமுக கட்சியின் அதிருப்தி நிர்வாகி புகழேந்திக்கு அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் இன்று புகழேந்தி சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்திதார். அதிமுகவில் இணைவது குறித்து தான் புகழேந்தி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பரபரப்பாக தகவல்கள் வெளியாயின. 

Pugazhendhi

எடப்பாடியுடன் பேச்சுவார்த்தையை முடித்த பின்னர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ‘என் மாமியார் வீட்டிற்கு வந்திருந்தேன், அப்படியே செல்லும் வழியில் எடப்பாடியை சந்தித்து நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இமாலய வெற்றி பெற்றதால் அதிமுகவுக்கு வாழ்த்து கூறலாம் என்று எடப்பாடி வீட்டிற்கு வந்தேன். அதிமுகவில் இணைவது குறித்து நான் முதல்வரிடம் பேசவில்லை. டிடிவி தினகரனால் அனைத்தையும் இழந்து விட்டு நிற்கிறேன். அதிமுக கட்சியில் சேர்வது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.