டிடிவி ஆதரவை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம்: நக்கீரன் கோபால் அதிரடி

 

டிடிவி ஆதரவை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம்: நக்கீரன் கோபால் அதிரடி

கைதுக்கு டிடிவி தினகரனின் ஆதரவை பொருட்படுத்த வேண்டாம் என பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறியுள்ளார்.

சென்னை: கைதுக்கு டிடிவி தினகரனின் ஆதரவை பொருட்படுத்த வேண்டாம் என பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறியுள்ளார்.

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் ஆளுநர் மாளிகையின் புகார் பேரில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதனையடுத்து தனது கைதுக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் தலைவர்களை சந்தித்து அவர் நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் நக்கீரன் பத்திரிகையை சிலர் முடக்க நினைக்கின்றனர்; சிறையில் இருக்கும் நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்து என செய்தி வெளியிட்டதால்தான் கைது நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். நான் கைது செய்யப்பட்டதற்குடிடிவி தினகரன் ஆதரவு தெரிவித்ததை பொருட்படுத்த வேண்டாம் என்றார்.