டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு வலுக்கும் சிக்கல்; சபாநாயகர் விரைவில் நோட்டீஸ்?

 

டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு வலுக்கும் சிக்கல்; சபாநாயகர் விரைவில் நோட்டீஸ்?

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பதவி இழந்துள்ள எம்எல்ஏ-க்கள் 18 பேர் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அவரின் பரிந்துரையை ஏற்று அவர்கள் மூவருக்கும் சபாநாயகர் விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளார் என கூறப்படுகிறது.

முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த 3 எம்எல்ஏ-க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.